அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை குணநாயகம் அவர்களின் குருத்துவ 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை அவர்களின் தலைமையில் திருப்பலியும் திருப்பலி நிறைவில் யூபிலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து கரவெட்டி புனித அந்தோனியார் ஆலய சுற்று மதிலில் புதிதாக அமைக்கப்பட்ட யூபிலி ஆண்டிற்கான உயிர்த்த ஆண்டவர் திருச்சொருப திறப்புவிழா இடம்பெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து திருச்சொருபத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்தந்தையர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

இத்திருச்சொருபத்திற்கான அடிக்கல் முன்னாள் பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் யஸ்ரின் அவர்களின் பணிக்காலத்தில் 2024ஆம் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களால் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள் தற்போதைய பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் பணிக்காலத்தில் நிறைவடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin