கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் தின சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயத்தில் நடைபெற்றது.

நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் மாணவர்களுக்கான சித்திரப்போட்டி நடாத்தப்பட்டு அன்றைய நாளை சிறப்பித்து பாடசாலை வளாகத்தில் ஒருதொகுதி மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டன.

தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் சித்திரப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், நிறுவன பணியாளர்களென 100க்கும் அதிகமானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin