சிறார்களின் விற்றல் வாங்கல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக நெடுந்தீவு சென் ஜேம்ஸ் முன்பள்ளி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை முன்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரீனா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சந்தை நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.

நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலக முன்பிள்ளைபருவ மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. டானியல் நிசாந்தினி, ஆசிரியர்கள், பெற்றோர், நலன்விரும்பிகளென பலரும் கலந்துகொண்டனர்.

By admin