யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்பு விழா 07ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்சகோதரி மரியசீலி மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை கரம்பொன் திருக்குடும்ப கன்னியர் மட முதல்வி அருட்சகோதரி செல்வதி மலக்கியாஸ் அவர்கள் தலைமைதாங்கி வழிநடத்தினார்.

இந்நிகழ்வில் 2024ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த முறையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாடசாலையின் பழைய மாணவியும் வைத்தியருமான திருமதி. மேரி சிபிலா எமில்குமார் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நலநிலைய இயக்குனர் அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

 

By admin