இளவாலை புனித யூதா ததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
சித்திரை மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் மைக் மயூரன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.