தேசிய அன்பிய வாரத்தை முன்னிட்டு திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அன்பிய வார சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அன்பிய திருப்பலிகளும் ஒன்றுகூடலும் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் பங்குமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

