மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறை இரக்க தியான இல்லத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்செய்தி பெருவிழா சித்திரை மாதம் 08ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை நடைபெற்றது.
தியான இல்ல இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை, திருப்பலி, நற்செய்தி பகிர்வு, நற்கருணை வழிபாடு என்பன இடம்பெற்றன.
இறுதிநாள் வழிபாடுகள் சித்திரை மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுடன் அன்றைய தினம் இறையிரக்க பெருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இவ்வழிபாடுகளில் 3000ற்கும் அதிகமான இறைமக்கள் கலந்து செபித்தனர்.

