காலி மறைமாவட்டம் உடுகம பங்கு மக்கள் இணைந்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை லசந்த சஞ்சீவ பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டங்களை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களையும் இடங்களையும் பார்வையிட்டதுடன் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களையும் யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்தனர்.

இவ்யாத்திரையில் 150 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin