திருகோணமலை மறைமாவட்ட இறையிரக்க திருத்தல 25ஆவது ஆண்டு திருவிழா பரிபாலகர் கப்புச்சின் சபை அருட்தந்தை அமல உதயம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
06ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

