மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாழ்வுதயம் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சித்திரை மாதம் 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் NVQ 3ஆம் மட்டத்தை நிறைவு செய்த 19 மாணவர்களுக்கு அங்கீகாரச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

By admin