இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு யூபிலி கலைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் ஆலயத்தின் 50 வருட படிமுறை வளர்ச்சி, சிறப்பு நிகழ்வுகள் போன்றவற்றின் புகைப்படங்கள், பங்குத்தந்தையர்கள் விபரங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

கண்காட்சியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை டணிஸ்ரன் அவர்கள் ஆரம்பித்துவைத்தார்.

யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்து கண்காட்சியை பார்வையிட்டனர்.

By admin