யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுக் கூட்டம் சித்திரை மாதம் 14ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை அகவொளி குடும்பநல நிலையத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் கிளரீசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வருகின்ற வைகாசி மாதம் 31ஆம் திகதி யாழ் மறைமாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படவுள்ள மறைமாவட்ட அன்பிய ஞாயிறு தொடர்பாகவும் மறைமாவட்ட மறைக்கோட்ட மற்றும் பங்கு ரீதியாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
