மன்னார் மறைமாவட்டதின் வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையின் அங்குரார்ப்பண நிகழ்வு 05ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆயர் அவர்கள் பாடசாலையை ஆரம்பித்து அதன் அதிபராக அருட்தந்தை அருட்குமரன் அவர்களை நியமனம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இப்பாடசலையில் முன்பள்ளி மற்றும் தரம் ஒன்றிற்கான வகுப்புகள் எதிர்வரும் 2024ம் ஆண்டு தைமாதம் ஆரம்பமாகவுள்ளதுடன் இவற்றிற்கான விண்ணப்ப படிவங்களை பாடசாலை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

By admin