யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் பாடல் போட்டி 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இன்று மறைநதி கத்தோலிக்க ஊடக மைய கலையகத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை பிறையன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்போட்டியில் 05 குழுக்கள் பங்குபற்றியிருந்த நிலையில் பாசையூர் பங்கு முதலாம் இடத்தையும் குமுழமுனை பங்கு இரண்டாம் இடத்தையும் பருத்தித்துறை பங்கு மூன்றாம் இடத்தையும் மறைமாவட்ட ரீதியாக பெற்றுக்கொண்டன.

By admin