யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் நடைபெற்றன.
நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் முல்லைத்தீவு மறைக்கோட்ட மாணவர்களுக்கு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்திலும் கிளிநொச்சி மறைக்கோட்ட மாணவர்களுக்கு கிளிநொச்சி மேய்ப்புப்பணி நிலையத்திலும் நடைபெற்றன.
இச்செயலமர்வில் 65 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin