மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்கள் தலைமையில் மறையாசிரியர்களின் உதவியுடன் பங்கு இளையோரின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நாளை சிறப்பித்து அன்று மாலை விளையாட்டு நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்கள், பங்குமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin