மன்னார் மறைமாவட்டத்தில் இயங்கும் மறைமாவட்ட ஆணைக்குழுக்களின் இவ்வருடத்ததிற்கான செயல்திட்டங்களை சமர்ப்பிக்கும் கூட்டம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்களின் தலைமையில் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆணைக்குழு இயக்குனர்கள் கலந்து இவ்வருடத்திற்கான செயற்திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து தாங்கள் முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.

By admin