தேசிய மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு மிருசுவில் பங்கில் முன்னெடுக்கப்ட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை லோரன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மாணவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
செபமாலைதாசர் சபை மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயசீலன் அவர்கள் தலைமைதாங்கி திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். தொடர்ந்து விளையாட்டு நிகழ்வும் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் விருந்தினர்களாக அருட்தந்தை ஜெயசீலன் அவர்களும், மிருசுவில் திருக்குடும்ப கன்னியர்மட அருட்சோதரி மேரிறோசி கலந்து சிறப்பித்தனர்.

By admin