அல்லைப்பிட்டி இராணுவ பிரதேசத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை ஜிம்பிறவுண் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை ஜிம் பிறவுண் அவர்கள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தீவகம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்படட மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது 2006ஆம் ஆண்டு இதேநாள் காணாமலாக்கப்பட்டார்.
அவருடன் சேர்ந்து பயணித்த திரு. வின்சன் விமலதாஸ் அவர்களும் இவ் அருட்தந்தையுடன் காணாமல் ஆக்கப்பட்டாதுடன் இவர்களைப்பற்றிய உண்மையான தகவல்கள் இதுவரை வெளிவராமல் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin