செம்பியன்பற்று றோ.க.த.க பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வு 30ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை முதல்வர் திரு. பகீரதகுமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் திருகோணமலை பிரதேசத்தை தரிசித்து அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் அருட்சகோதரி கிறிஸ்ரினா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களென 45 வரையானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/11/399766447_732771912227558_1069805418003652468_n-850x478.jpg)