ஊறணி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 175 ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வும் 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை தேவராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி நிறைவேற்றினார்கள்.
திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து 175 ஆவது யூபிலி நிகழ்வு அங்கு நடைபெற்று யூபிலி ஆண்டை சிறப்பிக்கும் ஊறணியம் நினைவுமலர் வெளியீடும் இடம்பெற்றது.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/06/355076326_646987597472657_2846689870455001087_n.jpg)