உரும்பிராய் புனித மிக்கேல் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
20ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin