இளவாலை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிறுவர் மற்றும் ஆசிரியர் தின நிகழ்வு 09ஆம் திகதி திங்கட்கிழமை இளவாலை புனித வளனார் விடுதியில் நடைபெற்றது.
முன்பள்ளி ஆசிரியர் சங்க இயக்குனர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் வழிநடத்தலில் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தலைவி திருமதி மடோனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விது நம்பிக்கை நிதிய பணிப்பாளர் செல்வி. நாகேந்திரம் விஜிதா அவர்கள் பிரதம விருந்தினராகவும் மாரீசன்கூடல் றோ.க.த.க பாடசாலை அதிபர் திரு. மயில்வாகனம் கபிலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கரித்தாஸ் கியூடெக் நிறுவன உறுப்பினர்களான திரு. அன்றே மற்றும் திரு. ஜோர்ச் பாஸ்கரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
 

By admin