இலங்கை ஆயர் பேரவையினர் இத்தாலி உரோமாபுரியிலுள்ள வத்திக்கான் நகரத்திற்கு சென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர்.
கடந்த 6ஆம் திகதி தொடக்கம் 10 திகதி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் மல்கம் கருதினால் றஞ்சித் அவர்களின் தலைமையில் இலங்கையின் 12 மறைமாவட்டங்களை சேர்ந்த ஆயர்களும் துணைஆயர்களும் கலந்துகொண்டனர்.
ஆயர்குழு 6ஆம் திகதி திங்கட்கிழமை வத்திக்கான புனித பேதுருவானவர் பெருங்கோவிலில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் கல்லறை பீடத்தில் திருப்பலி ஒப்புக்கொடுத்ததுடன் தொடர்ந்து திருப்பீடத்தில் அமைந்துள்ள பல்வேறு துறையினரையும் சந்தித்து இலங்கை திருஅவை பற்றி கலந்துரையாடினர்.
மேலும் 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர். வழமைபோன்று ஐந்தாண்டிற்கு ஒருமுறை நடைபெறும் இச்சந்திப்பு திருஅவையால் ‘Ad Limina Visit’ என அழைக்கப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin