மாலை நேர வகுப்புக்களை நடாத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா
அல்லைப்பிட்டிப் பங்கில் மாலை நேர வகுப்புக்களை நடாத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டட திறப்பு விழா 17ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பிலிப்பு நேரியர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.
முதன்நன்மை பெறவுள்ள சிறார்களுக்கான பாசைறையும் ஞானறிவுச் சுற்றுலாவும்
குளமங்கால் பங்கில் முதன்நன்மை பெறவுள்ள 65 சிறார்களுக்கான பாசைறையும் ஞானறிவுச் சுற்றுலாவும் 16ஆம் திகதி கடந்த புதன்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை மாதா திருத்தலத்தில் இடம்பெற்றது.
பீடப்பணியாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் குருநகர் பீடப்பணியாளர்கள் மற்றும் அளம்பில் பீடப்பணியாளர்கள் ஒன்றிணைந்த தலைமைத்துவ பயிற்சி கடந்த 16,17ஆம் திகதிகளில் நடைபெற்றது.
முதல் திருப்பலி – அருட்திரு தேவபாலன் பற்றிக் ஜோண்சன்
யாழ் மறைமாவட்டத்தில் கடந்த 16ஆம் திகதி குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட கிளறேசியன் துறவற சபையை சேர்ந்த அருட்திரு தேவபாலன் பற்றிக் ஜோண்சன் அவர்கள் தனது முதல் திருப்பலியை 19ம் திகதி கடந்த சனிக்கிழமை பெரியவிளான் பங்கின் தூய திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் ஒப்புக்கொடுத்தார்.
குடும்ப விழா -மானிப்பாய் புனித அன்னம்மாள் ஆலயம்
மானிப்பாய் பங்கில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தில் அவ்வாலயத்தை சேர்ந்த அனைத்துக் குடும்பங்களையும் ஒன்றிணைத்த குடும்ப விழா 20ஆம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு கொண்டாடப்பட்டது.