யாழ். மறைமாவட்ட புதிய குருமுதல்வராக அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அவர்கள் புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களால் நியமனம்பெற்று பணிப்பொறுப்பேற்றார்.
அவருடன் இணைந்து மறைமாவட்ட நிதி முகாமையாளராக அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களும், மறைமாவட்ட ஆயரின் செயலாளராக அருட்தந்தை பீற்றர் அமலதாஸ் கமல்ராஜ் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து குருக்கள் சிலருக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன. யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தையாக அருட்தந்தை யோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களும், நெடுந்தீவு பங்குத்தந்தையாக அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களும், பூநகரி பதில் பங்குத்தந்தையாக அருட்தந்தை றிச்சட் ஒலிவர் ரெரன்ஸ் அவர்களும், யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலைய பதில் இயக்குனராக அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களும் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களால் நியமனம் பெற்றுள்ளனர்.
இந்நியமனங்கள், யாழ். மறைமாவட்டத்தை புதிதாகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களால் வழங்கப்பட்ட முதலாவது நியமனங்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
