மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறையழைத்தல் சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு, செங்கலடி மறைக்கோட்டங்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித மரியன்னை பேராலயத்திலிருந்து லுஆஊயு மண்டபம் வரையான நடைபவனி நடைபெற்றது.

தொடர்ந்து மண்டபத்தில் நற்கருணை வழிபாடும் அருட்சகோதர, சகோதரிகளின் இறை அழைத்தல் சிறப்பு நாடகமும் திருப்பாலத்துவ சபை சிறார்களின் கலைநிகழ்வுகளும் கண்காட்சியும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், திருப்பாலத்துவ சபை சிறார்கள், ஊக்குவிப்பாளர்கள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin