யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் கிறிஸ்து உயிர்ப்பு விழா சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலவச மருத்துவ பரிசோதனை, பங்குமக்களுக்கான விளையாட்டுக்கள், உணவுப்பொருள் விற்பனை என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.

