மட்டக்களப்பு மறைமாவட்டம் கல்முனை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குனி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேற்றாத்தீவு புனித யூதாததேயு திருத்தலத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ரெறன்ஸ் றாகேல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை வழிபாடு, குணமாக்கல் வழிபாடு, திருப்பலி, என்பன இடம்பெற்றன.
நற்கருணை வழிபாடு மற்றும் குணமாக்கல் வழிபாட்டை திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்கள் வழிப்படுத்தினார்.
இவ்வழிபாடுகளில் ஏராளமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றினர்.

