திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் மறைமாவட்டத்தின் 12 ஆலயங்களை தரிசித்து திருச்சிலுவைப்பாதையின் ஒவ்வொரு நிலைகளையும் தியானித்ததுடன் மீண்டும் உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தை வந்தடைந்து இறுதி இரண்டு நிலைகளையும் தியானித்தனர்.
இந்நிகழ்வில் 65 மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

