2026ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கத்தோலிக்க திருமறை பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வுகள் தை மாதம் 31ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன.
மறைக்கல்வி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக் வின்சன்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் மறைக்கோட்டங்கள் ரீதியாக 17 இடங்களில் இச்செயலமர்வுகள் இடம்பெற்றன.
இச்செயலமர்வுகளில் 1000ற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்.

