இலங்கை நாட்டிற்கான நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே டி போர் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு தை மாதம் 21ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

அத்துடன் பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக் அவர்களும் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களை தை மாதம் 19ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் அருட்சகோதரிகளும் ஆயர் அவர்களை தை மாதம் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

By admin