பூநகரி பங்கிற்குட்பட்ட செம்பொன்குன்று புனித யோசேவாஸ் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
16ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 17ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை லோறன்ஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

