மறைக்கல்வி மாணவர்களையும் மறையாசிரியர்களையும் இணைத்து பண்டத்தரிப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டு மகிழ்வோம் சிறப்பு நிகழ்வு தை மாதம் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித பற்றிமா அன்னை மறைப்பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
அருட்சகோதரர் ஸ்டீபன்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். புனித மரியன்னை பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை றொகான் டியோனி அவர்கள் வளவாளராக கலந்து குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள், தீப்பாசறை என்பவற்றின் ஊடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 94 மாணவர்களும் 11 மறையாசிரியர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.

