இளவாலை அசிசிபுரம் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
16ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை சில்லாலை பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை மொண்ட்பேர்ட் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.