நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வுகளின் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் கடந்த மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய பங்குப் பணிமனையில் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

By admin