யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்காலத் தியானமும் ஒன்றுகூடலும் கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாதகல் லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது.
மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவுள பணியாளர் சபை அருட்தந்தை பிராங் டவ் அவர்கள் கலந்து திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், தியான உரை, நற்கருணை வழிபாடு, குழுச்செயற்பாடு என்பவற்றின் ஊடாக இளையோரை நெறிப்படுத்தினார்.
தொடர்ந்து மறைக்கோட்ட இளையோருக்கான புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த 80 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.