யாழ். மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் 2024ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் கிறிஸ்தவ நாகரிக பாடத்திற்கு தோற்றவுள்ள மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வு 02ஆம் திகதி சனிக்கிழமை  யாழ்ப்பாணம், பருத்தித்துறை, இளவாலை, கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றன.
நிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுந்குபடுத்தலில் யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க ஆசிரியர் சங்கத்தின் உதவியுடன் இச்செயலமர்வுகள் இடம்பெற்றன.
இளவாலை மறைக்கோட்ட மாணவர்களுக்காக இளவாலை புனித ஹென்றியசர் கல்லூரியிலும் பருத்தித்துறை மறைக்கோட்ட மாணவர்களுக்காக பருத்தித்துறை புனித தோமையார் ஆலயத்திலும் யாழ். மறைக்கோட்ட மாணவர்களுக்காக யாழ். மறைக்கல்வி நடுநிலையத்திலும் கிளிநொச்சி மறைக்கோட்ட தெற்கு வலய மாணவர்களுக்காக முழங்காவில் அன்பகம் சிறுவர் இல்லத்திலும் நடைபெற்றன.
இச்செயலமர்வில் 135வரையான மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்.
அத்துடன் முல்லைத்தீவு மறைக்கோட்ட மாணவர்களுக்கான செயலமர்வு புதுக்குடியிருப்பு றோ.க. வித்தியாலயத்திலும் கிளிநொச்சி மறைக்கோட்ட மாணவர்களுக்கான செயலமர்வு கிளிநொச்சி மேய்ப்புப்பணி நிலையத்திலும் 9ஆம் திகதி வருகின்ற சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin