இலங்கை பொலிஸ் மா அதிபராக அண்மையில் நியமனம் பெற்ற தேசபந்து தென்னக்கோன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பு கடந்த 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

அத்துடன் குருநகர் கடல்தொழிலாளர் சங்க அங்கத்தவர்களுக்கும் யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கடல் வளங்களை வெளிநாடுகளுக்கு குத்தகைக்குவிடும் அரசின் திட்டத்தால் கடல்தொழிலாளர் எதிர்நோக்கவுள்ள பிரச்சனைகள் தொடர்பாக கடல்துரையாடப்பட்டது.

By admin