யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் இவ்வருடமும் அங்கு நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்ததுடன் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறுதிநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன.

இறுதி நாளன்று மாலை யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்புத் திருப்பலியும் தொடர்ந்து கல்லறை ஆண்டவர் திருச்சொருப முத்தியும் இடம்பெற்றன.

இத்தியான நிகழ்வுகளில் ஏராளமானவர்கள் பக்தியுடன் கலந்து செபித்தார்கள்.

By admin