உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு முல்லைத்தீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்தந்தை சதீஸ்குமார் மற்றும் மறையாசிரியர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை அமரர் அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் நினைவாக முல்லைத்தீவு மறைக்கோட்ட 16 வயதுக்குட்பட்ட பீடப்பணியாளர்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டி முல்லைத்தீவு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றது.
அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து இந்நிகழ்வை சிறப்பித்ததுடன் தொடர்ந்து அன்றைய தினம் மாலை முல்லைத்தீவு கப்பலேந்தி மாதா ஆலய வளாகத்தில் பாரம்பரிய விளையாட்டுக்களும் பரிசளிப்பும் நடைபெற்றன.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆசிரியர் அருட்தந்தை றெக்ஸன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin