மன்னார் மருதமடு அன்னையின் திருச்சுருபம் கிளிநொச்சி மறைக்கோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடந்த 22ஆம் திகதி தொடக்கம் பங்குரீதியாக மக்கள் வணக்கத்திற்கு வைக்கப்பட்டு திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து முல்லைத்தீவு மறைக்கோட்டத்திற்கு அன்னையின் திருச்சுருபம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இவ்வணக்க நிகழ்வுகளிலும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வழிபாடுகள் மற்றும் சிறப்பு ஆராதனைகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மதவேறுபாடின்றி பங்குபற்றி அன்னையின் திருச்சுருபத்தை தரிசித்து அன்னையின் ஆசி பெற்று வருகின்றனர்.
முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளை தரிசித்ததை தொடர்ந்து அன்னையின் திருச்சொருபம் வருகின்ற 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மடுத்திருத்தலத்திற்கு மீண்டும் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

By admin