இளவாலை பத்தாவத்தை புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 25ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.

திருவிழா திருப்பலியை எமிலியானுஸ்பிள்ளை ஓய்வுநிலை குருக்கள் இல்ல பொறுப்பாளர் அருட்தந்தை ஜோசப் ஜெயசீலன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை யேசுதாஸ் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin