உடுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டுப்போட்டி கடந்த 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது.

ஆர்க் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சாந்தினி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இல்ல பொறுப்பதிகாரி அருட்சகோதரி றூபினி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உடுவில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் திருக்குடும்ப கன்னியர் மட யாழ். மாகாண ஆலோசகர் அருட்சகோதரி பிறோத்மேரி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin