யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய ஊக்குவிப்பாளருக்கான கருத்தமர்வு கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட அன்பிய இயக்குநர் அருட்தந்தை யேசுரட்ணம் மற்றும் திரு. அலெக்ஸ் அமலரட்ணம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள் ஊடாக ஊக்குவிப்பாளர்களை நெறிப்படுத்தினார்கள்.
இக்கருத்தமர்வில் 45 வரையான அன்பிய ஊக்குவிப்பாளர்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin