![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/04/6f783244-6518-41f7-8bb1-ed366d47721a-1200x675.jpg)
யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சர்வமதங்களையும் உள்ளடக்கிய சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை 02ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஆணைக்கோட்டை கிராமத்தில் இடம்பெற்றது.
நாட்டின் தற்கால அசாதாரண சூழ்நிலை நீங்கி நாட்டில் அமைதியையும் மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவும் வேண்டி முன்னெடுக்கப்பட்ட கூட்டுப்பிராத்தனை நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள் பங்குபற்றினார்கள். இந்நிகழ்வு யாழ்ப்பாணக் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குனர் அருட்திரு இயூஜின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/04/297067f6-528c-4fdf-8de4-ab53d725e8ce-1200x675.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/04/57d1b806-1a1a-4d81-9068-808300b5fb3b-1200x675.jpg)