குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது இலங்கை அரச விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுதாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டு இதே தினம் குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது கிபிர் விமானங்கள் கண்மூடித்தனமாக மேற்கொண்ட தாக்குதலில் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
இந்நாளை நினைவுகூர்ந்து பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் தொடர்ந்து இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/11/Snapshot_268.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/11/Snapshot_269.png)