ஏழாலை புனித இசிதோர் ஆலய திருவிழா
சுன்னாகம் பங்கின் ஏழாலை புனித இசிதோர் ஆலய வருடாந்த திருவிழா அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 18ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
குருக்களுக்கான திருவழிபாட்டு கருத்தமர்வு
மன்னார் மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருக்களுக்கான திருவழிபாட்டு கருத்தமர்வு கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை மன்னார் மறைமாவட்ட பொதுநிலையினர் குடும்பப்பணி நிலையத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசீர்வாதப்பர் சபையை சேர்ந்த அருட்தந்தை சூசைநாதன் அவர்கள்…
பீடப்பணியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை
திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை மற்றும் இலிங்கநகர் பங்கு பீடப்பணியாளர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப் பட்டறை கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை உவர்மலை குழந்தை இயேசு ஆலயத்தில் நடைபெற்றது. உவர்மலை பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட பீடப்பணியாளர்…
சிறுவர் பூங்கா திறப்பு விழா
சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா கடந்த 20ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்களின் வழிநடத்தலில் ஆலய இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தை சேர்ந்த இயேசு சபை குருவான அருட்தந்தை எழில்ராஜன் அவர்களின் அன்புத்தாயார் இராஜேந்திரம் செல்வநாயகி அவர்கள் கடந்த 21ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரின் வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.
