Author: admin

முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு

மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு யூலை மாதம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாசன் சந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி…

புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியால கண்காட்சி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியால ஆரம்ப பிரிவு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கண்காட்சி யூலை மாதம் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வித்தியாலய அதிபர் அருட்தந்தை றொபின்சன் யோசப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி…

அருட்சகோதரி மார்த்தா அவர்களின் 100ஆவது அகவை தின நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி மார்த்தா அவர்களின் 100ஆவது அகவை தின நிகழ்வு யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாசையூர் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் நடைபெற்றது. கன்னியர் சபை யாழ். மாகாண குழுவின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

தீவகம் சாட்டி பங்கிற்குட்பட்ட வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்படுத்தலில் யூலை மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயரின் செயலர் அருட்தந்தை ரெறன்ஸ்…

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டி யூலை மாதம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஸ்கந்தவரோதயா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணி 18 வயதிற்கு உட்பட்டோருக்கான இறுதியாட்டத்தில் முதலாமிடத்தையும் யாழ். புனித பத்திரிசியார்…