Author: admin

மல்லாவி பங்கு கள அனுபவ பயணம்

மல்லாவி பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ பயணம் புரட்டாதி மாதம் 5,6,7ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் ஆசிரியர்களும் அனுராதபுரம், மிகிந்தல, தம்புள்ள, கண்டி தலதா…

இளவாலை புனித யாகப்பர் ஆலய பீடப்பணியாளர் மன்றவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித ஞானப்பிரகாசியார் பீடப்பணியாளர் மன்றவிழா ஆவணி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம் காலை யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை…

உடையார்கட்டு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

உடையார்கட்டு பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 09ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் உடையார்கட்டு புனித…

பொதுநிலையினருக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள்

யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சிநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மன்னார் மறைமாவட்டங்களில் நடைபெற்றன. சபை பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் ஆவணி மாதம் 29,30,31ஆம் திகதிகளிலும் மன்னார் மறைமாவட்டத்தில்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 8ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 7ஆம் திகதி…